ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம் : தேர்தல் நடத்த வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்

Aug 12 2020 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்பிரிக்க நாடான மாலியில், அதிபர் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மாலி நாட்டின் அதிபராக இப்ராஹீம் பாபாக்கா கேய்த்தா பதவி வகித்து வருகிறார். ஆளும்கட்சியினர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்ததால் அதிபர் பதவி விலகக் கோரி கடந்த நான்கு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடிவருகின்றன. பமாகா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மாலியில் இது போன்ற தொடர் போராட்டங்கள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என அண்டை நாடுகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என எதிர்க்கட்சிகள் முழங்கி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00