லண்டனிலிருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை : அடுத்த மாதம் 2-ம் தேதியிலிருந்து தொடங்கும் என அறிவிப்பு
Aug 14 2020 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் லண்டனிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி முதல், டெல்லி & மும்பை போன்ற இந்திய நகரங்களுக்கு விமானங்களை இந்நிறுவனம் இயக்கவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 2ம் தேதியிலிருந்து வாரத்திற்கு 3 விமானங்கள் டெல்லியிலிருந்து லண்டனுக்கும், செப்டம்பர் 17ம் தேதி முதல் மும்பையிலிருந்து லண்டன் நகருக்கும் வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும் என தெரியவருகிறது. இதே போல் உலகின் மற்ற நாடுகளுக்கும் விமான சேவைகள் லண்டனிலிருந்து தொடங்கப்படும் என விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.