தென்கொரியாவின் சியோல் நகரில் பேருந்து பயணிகள் அனைவரும் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதி
Aug 15 2020 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் உள்ள பயணியர் காத்திருக்கும் அறைகளுக்குள் நுழைய வேண்டும் என்றாலே, வெப்பநிலை பரிசோதனைக்கு பயணிகள் உட்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்காக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு, சரியான வெப்பநிலை இருப்பவர்கள் வந்தால் மட்டுமே அந்த கதவுகள் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சியோல் நகரம் முழுவதும் இதே போன்ற பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பேருந்தில் ஏறும் பொதுமக்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்குப் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.