சீனாவின் யாங்சே ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் : பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்
Aug 15 2020 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் யாங்சே ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டடதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த மாதத் தொடக்கத்தில் சீனாவில் பெய்யத் தொடங்கிய மழை, மாத இறுதி வரை தொடர்ந்து பெய்ததால் நாடு முழுவதும் வெள்ளக்காடானது. இந்நிலையில், சில நாட்கள் இடைவெளிவிட்ட கனமழை, மீண்டும் தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்யத் தொடங்கியது. இதனால் யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் கடந்த இருதினங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றம் குடியிருப்புக்களைச் சேர்ந்த பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கின. மேலும், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டதாக சீன அரசு அறிவித்தது.