கொரோனாவால் உலக அளவில் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் - யுனிசெஃப் நிறுவனம் கவலை
Sep 18 2020 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் கொரோனாவால் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்பும், குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தின. இதில், கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை 120 கோடியாக உயர்ந்திருப்பதாக யுனிஃசெப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. இதில் 45 சதவீத குழந்தைகள் மேற்படி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றுகூட கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், யுனிஃசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.