பிரேசில் நாட்டின் ஈரப்பதம் மிக்க காடுகளில் தீ - சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம்
Sep 19 2020 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசில் நாட்டின், ஈரப்பதம் மிக்க காடுகளில் தீ பற்றி எரிவதால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமேசான் காடுகளுக்கு இணையான இயற்கை வளங்களைக் கொண்டுள்ள பன்டானால் காடுகள், உலகிலேயே மிகப்பரந்த, ஈரப்பதம் மிக்க நிலமாக திகழ்கிறது. இப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க ஏராளமான வீரர்கள் இரவும் பகலும் போராடிவருகின்றனர். இருப்பினும், தீ முழுமையாக அணைக்கப்படவில்லை. இக்காடுகளில் தீ பற்றி எரிவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படும் என சூழலியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.