ஐ.நா. அமைதி காக்கும் திட்டங்களில் அதிக பங்களிப்பு - சீன அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தகவல்
Sep 19 2020 3:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படைகளுக்கு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு, கடந்த முப்பது ஆண்டுகளில் 25 திட்டங்களுக்காக நாற்பதாயிரம் வீரர்களை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் அமைதி காக்கும் பணிகளுக்கும் அதிக எண்ணிக்கையிலான சீன போர் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.