அர்ஜென்டினாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - நோய் தொற்றைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை
Sep 19 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு விதிகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அர்ஜென்டினாவில் கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நோய் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 6 லட்சத்து இரண்டாயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.