சீனாவில் நெல் நாற்றுகளுக்கு இடையே இரால் வளர்க்க அறிவுரை - விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கை
Sep 22 2020 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மேற்கு சீனாவில் விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையில் நெல் நாற்றுகளுக்கு இடையே இரால் வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிச்சுவான் மாகாணத்தின் கோபிங் மாவட்டத்தில் இது போன்ற அறிவுரைகளை பெருமளவில் விவசாயிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் மொத்த வேளாண் நிலப்பரப்பாக 3 ஆயிரத்து 300 ஹெக்டேர் கண்டறியப்பட்டுள்ளது. வேளாண் நிலங்களுக்கு இடையே சிற்றோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளன. இதனால் இரால் வளர்ப்பு பெரிய அளவில் வருவாய் ஏற்படுத்தும் தொழிலாக வளர்ந்துவருகிறது.