தடுப்பு மருந்தைப் பெறுவதில் அனைவருக்கும் சமவாய்ப்பு - 156 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
Sep 22 2020 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், உலகம் முழுவதும் சமமாகப் பகிர்ந்து கொள்ள 156 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டிறுதிக்குள் உலகம் முழுவதும் 200 கோடி பேருக்கு தடுப்பு மருந்து அளிக்கும் முயற்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள 64 நாடுகள் பணக்கார நாடுகள் பட்டியலில் உள்ளன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இந்நாடுகளில் வசிக்கின்றனர்.