பிரிட்டனில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்: பொதுமக்கள் வீட்டில் இருந்தே பணியை தொடர பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தல்
Sep 23 2020 9:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
பிரிட்டனில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 'ஆரம்பம் முதலே கொரோனா வைரசை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்., மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரசைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார்' என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், ''கொரோனா எளிதாக இருக்கப் போவதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களால் முயன்ற வரையில் வீட்டிலிருந்தே பணியைத் தொடருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்த ஜான்சன், பார்கள், உணவு விடுதிகள் மற்றும் பிற கடைகள், இரவு 10 மணிக்கு மூடப்படும்,'' என்றார்.