கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
Sep 23 2020 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் திரு. டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
ஐ.நா. சபையின் 75ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் திரு. டொனால்ட் ட்ரம்ப், முதலாம் உலக யுத்தம் முடிந்து 75 ஆண்டுக்களுக்கு பின் தற்போது மீண்டும் ஒரு சர்வதேச போராட்டத்தில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளதாகவும் கொரோனாவை உலகிற்கு கட்டவிழுத்து விட்ட நாட்டை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்காவிடம் கொரோனாவுக்கு மூன்று தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாக தெரிவித்த திரு. டிரம்ப், அவை உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கூறினார்.