ஆஸ்திரேலியாவில் ஆழமற்ற பகுதியில் சிக்கித் தவிக்கும் திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் அனுப்பும் பணிகள் தீவிரம்
Sep 23 2020 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா தீவுக்கு அருகே ஆழம் குறைந்த பகுதியில் சிக்கித் தவிக்கும் திமிங்களை மீட்கும் பணியில் மேலும் பல தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் 270 திமிங்கலங்கள் இது போல் தவித்துவருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மேலும் 200 திமிங்கலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை, கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பும் பணிகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றுவருகின்றன. இதுவரை 25 திமிங்கலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 90 திமிங்கலங்கள் உயிரிழந்தன.