தெற்கு சூடானில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்
Sep 23 2020 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு சூடானில் பலத்த மழை பெய்ததால் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோங்லி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்றனர். பாலங்கள் மற்றும் சாலைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.