கொலம்பியாவின் காக்கா மாவட்டத்தில் தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை
Sep 23 2020 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவின் காக்கா மாவட்டத்தில் தீவிரவாத கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்நாட்டில் செயல்பட்டுவந்த ஃபார்க் கொரில்லா தீவிரவாதிகள், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமைதிவழிக்குத் திரும்பினர். அதன் பின் கொலம்பியா முழுவதும் அமைதி நிலவியது. ஆனால், அந்த அமைப்பிலிருந்து பிரிந்த சிறிய குழு ஒன்று மீண்டும் தாக்குதல்களைத் தற்போது தொடங்கியிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.