கொரோனா குறைந்திருந்த நாடுகளிலும் மீண்டும் தலை தூக்கும் தொற்று - உலக நாடுகள் அதிர்ச்சி
Sep 24 2020 9:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா குறைந்திருந்த நாடுகளிலும் மீண்டும் தொற்று தலைத்தூக்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரசில், ரஷ்யா, கொலம்பியா, தென் ஆப்பிரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ளது. உலகில் அளவில் கொரோனா தொற்றால் இதுவரை 98 லட்சத்து அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் தொற்று பாதிப்பால் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஆர்ஜென்டீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா குறைந்திருந்த நிலையில், மீண்டும் அங்கு தலை தூக்கியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.