பெலாரஸ் அதிபராக முன்னறிவிப்பின்றி பதவியேற்றுக்கொண்ட அதிபர் : நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு
Sep 24 2020 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெலாரஸ் அதிபராக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பதவியேற்றுக்கொண்ட Lukashenkoவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டிலிருந்து அதிபர் பதவியில் நீடிக்கும் Lukashenkoயின் கட்சி, ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெருமளவில் கள்ள ஓட்டு போட்டதாகவும், மோசடிகளை அரங்கேற்றியதாகவும் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்தினர். அதிபர் பதவியேற்றுக்கொண்டதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், அதிபரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ஆசிரியையான ஸ்வியட்லானா சிகனாஸ்கயா, தம்மை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு ரகசியமாக அதிபர் பதவியேற்றுக் கொண்டதே அவருடைய தோல்வியைக் காட்டுகிறது என்றார். மேலும் பேசிய அவர், சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையான தலைவர் அதிபர் பதவிக்கு வரமுடியும் என்றும் தெரிவித்தார்.