நோபல் பரிசுத் தொகை அதிகரிப்பு - விருது பெறுவோருக்கு 11 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்பப்படும் என அறிவிப்பு
Sep 25 2020 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நோபல் பரிசுத் தொகை 11 லட்சம் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும், உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோபல் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டிற்கான, மருத்துவம், வேதியியல், கலாச்சாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கான பரிசு, அடுத்த மாதம் 5-ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு, நிதிநிலையை மேம்படுத்துவதற்காக நோபல் பரிசுத்தொகை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நிதிநிலைமை மேம்பட்டதை தொடர்ந்து, பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நோபல் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.