லண்டனில் காவல் அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்திய கைதி - சிகிச்சை பலனின்றி காவல் அதிகாரி உயிரிழப்பு
Sep 25 2020 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல் அதிகாரி உயிரிழந்தார். போலீசாரின் நடவடிக்கையின் போது, கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை நடத்துவதற்காக தெற்கு லண்டனில் உள்ள அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பிரிட்டனில் சாதாரணமாக போலீசார் துப்பாக்கி வைத்துக்கொள்வதில்லை என்ற நிலையில், கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். பின்னர் அந்தக் கைதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.