தெற்கு சூடானில் இரண்டு மாதங்களாகத் தொடரும் கனமழை - 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
Sep 25 2020 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு சூடானில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்நாட்டு மக்கள் தற்போது வீடுகளை இழந்து, உணவுக்கே வழியின்றித் தவித்து வருகின்றனர். மழைப் பொழிவினால் சாலைகள் மற்றும் பாலங்கள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் ஏராளமான தடைகள் நிலவுகின்றன. தற்போதைய நிலையில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ வழியின்றித் தவித்துவருகின்றனர்.