பாரீசில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Sep 26 2020 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரீசில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரீஸ் நகரில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தின் முன்பாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இத்தாக்குதல் மத அடிப்படைவாத தீவிரவாத தாக்குதல் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், அவர்களது அடையாளங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.