வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Oct 22 2020 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வியட்நாமில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாம் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் குவாங்க் பின்ஹ் மாகாணம், கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளன. சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை வெள்ளம் காரணமாக 1 லட்சத்து 78 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனனர். நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.