ஃபிரான்ஸில் ஒரே நாளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது
Oct 23 2020 10:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்சில் புதிய பதிவாக 41 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவற்றில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 622 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 210 ஆக உயர்ந்து இருக்கிறது. வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.