கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
Oct 23 2020 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கிய போது ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்த உலக நாடுகள் முடிவெடுத்தன. ஆனால் அந்த மருந்தில் எந்தப் பயனும் இல்லை என அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்த மருந்தைப் பயன்படுத்த உணவு மற்றம் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.