வீட்டு விலங்குகளைப் பராமரிக்காவிட்டால் சிறை தண்டனை - மெக்சிகோ நாட்டில் உள்ள ESCOBEDO நகரம் முடிவு
Oct 23 2020 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வீட்டு விலங்குகளை சரியாகப் பராமரிக்காவிட்டால் உரிமையாளர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க மெக்சிகோ நாட்டில் உள்ள ESCOBEDO நகரம் முடிவெடுத்துள்ளது. நகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானங்களின் படி, வளர்ப்பு விலங்குகளின் உடல் நிலை, உடல் தூய்மை உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யவும், ஏதேனும் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், வளர்ப்பு விலங்குகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் கால்நடை மருத்துவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.