அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதம் : இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
Oct 24 2020 10:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதத்தின்போது பேசிய டிரம்ப், இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் நடைபெற்றது. அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரகாரமாக பேசினர். அப்போது காற்று மாசுபாடு குறித்து பேசிய டிரம்ப், இந்தியா மீது குற்றம்சாட்டினார். சீனா, ரஷியாவைப் போன்று இந்தியாவிலும் காற்று மாசடைந்துள்ளது என்றார் டிரம்ப். அமெரிக்காவில் குறைந்த அளவில் கார்பன் வெளியேற்றப்படுவதாகவும், இந்தியாவும், ரஷியாவும் பருவநிலை மாற்ற பிரச்சினையில் முதலில் உள்ள நாடுகள் எனவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.