இத்தாலியில் கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்தது வன்முறை
Oct 28 2020 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில் கொரோனா ஊரடங்கு உத்தரவை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் 2வது அலை, பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், பல நாடுகள் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இத்தாலியில் மாலை 6 மணிக்கே உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் கண்டனம் தெரிவத்துள்ளனர். அரசின் நடவடிக்கையை எதிர்த்து, ரோம், பலேர்மோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வன்முறையிலும் இறங்கினர். அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
டுரின் பகுதியில் உள்ள ஒரு பிரபல பல்பொருள் அங்காடியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக அங்கு கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.