பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 2 நோயாளிகள் உயிரிழப்பு
Oct 28 2020 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 நோயாளிகள் உயிரிழந்தனர்.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தின் அடித்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்துவிட்டு எரிந்து புகைமூட்டமாக காட்சியளித்தது. தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும், இந்த விபத்தில், இந்த தீ விபத்தில் நோயாளி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் அதிகமான நோயாளிகள் தீ விபத்துல் இருந்து மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.