ஸ்பெயின் நாட்டின் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பூனைகளை தத்தெடுத்துக்கொள்ள ஆன்லைன் மூலம் அழைப்பு
Oct 28 2020 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டின் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பூனைகளில் பல, தங்கள் எஜமானர்களை கொரோனாவிற்கு பறிகொடுத்து தவித்து வருகின்றன. இதனால் அவற்றை தத்தெடுத்துக்கொள்ள ஆன்லைன் மூலம் காப்பக நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். அந்நாட்டு தலைநகரில் இயங்கி வரும் காப்பகத்தில், ஏராளமான பூனைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் எஜமானர்களில் பலர் கொரோனாவிற்கு பலியானதால் பூனைகளை பராமரிக்க முடியாமல் காப்பகம் தவித்து வருகிறது. இதனால் பூனைகளை தத்தெடுத்துக்கொள்ள ஆன்லைன் மூலம் அந்த காப்பகம் அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளையில் பூனைகளை பராமரிக்க பண உதவிகளை அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.