பிரான்ஸ் அதிபருக்கு எதிராக வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் - பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்பு
Oct 30 2020 7:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரு குறிப்பிட்ட மதத்தின் கட்டுப்பாடுகள் பிரான்ஸ் மக்களின் உரிமைகளைப் பறிப்பதாகப் பேசிய அதிபர் இம்மானுவல் மேக்ரானைக் கண்டித்து வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரான்ஸ் நாட்டு பள்ளி ஆசிரியர் ஒருவர் பேச்சுரிமை குறித்து வகுப்பெடுத்த போது குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அதனால், அவரை மத அடிப்படைவாதி ஒருவர் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தார். இதைக் கண்டித்துப் பேசிய அதிபர் மேக்ரான், குறிப்பிட்ட மதக்கட்டுப்பாடுகள் பிரான்ஸ் நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக விமர்சித்தார்.