மெக்சிகோவில் அதிகரிக்கும் படுகொலைச் சம்பவங்கள் - ஒரே இடத்தில் 59 பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
Oct 30 2020 7:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் ஒரே இடத்தில் 59 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் மெக்சிகோ முன்னணி நாடாகத் திகழ்கிறது. Guanajuato மாநிலத்தில் மட்டும் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2 ஆயிரத்து 250 பேர் போதை கடத்தல் கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சல்வட்டீரா நகரின் அருகே தேசிய தேடுதல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.