துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் 4 பேர் பலி - 120 பேர் படுகாயம்
Oct 30 2020 9:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 4 பேர் உயிரிழந்தனர்.
Aegean கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளில் உணரப்பட்டது. குறிப்பாக துருக்கியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக தென்பட்டது. துருக்கியின் கடற்கரையோர மாகாணமான இஸ்மிரில் 7 புள்ளி பூஜ்ஜியம் என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வினால், கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இஸ்மிர் மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக, அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் பல கட்டங்களில் லேசார கீரல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.