வியட்நாமில் ஏற்பட்ட புயல் மற்றும் பயங்கர நிலச்சரிவு : 50 பேர் மாயம் 19 பேர் உயிரிழப்பு
Oct 31 2020 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வியட்நாமில், மொலாவே புயல் மற்றும் நிலச்சரிவால் 35 பேர் பலியாகி உள்ளனர். வியட்நாமில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அங்கு குவாங்நாம் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.