இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் நீல நிற நிலா : இன்றிரவு ஏற்படவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தகவல்
Oct 31 2020 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புளூ மூன் நிகழ்வு இன்றிரவு ஏற்பட உள்ளது.
மாதத்தில் ஒரு முறை மட்டுமே பவுர்ணமி வரும். எப்போதாவது சில சமயங்களில் இரண்டு பவுர்ணமி வந்துவிடும். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பவுர்ணமி, மாதத்தில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சராசரியாக 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்துவிடுகிறது. இதேப்போல் ப்ளூ மூன் எனப்படும், நீல நிலா, 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முறை மட்டுமே வானில் ஏற்படும் அரிய நிகழ்வாகும். இன்றிரவு வானில் தோன்றவிருக்கும் நீல நிலவு இத்துடன் 2023 ஆகஸ்ட் 31-ந்தேதியும், 2026 மே 31-ந்தேதியும், 2028 டிசம்பர் 31-ந்தேதியும் இது மீண்டும் தோன்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.