சுற்றுச் சூழலுக்கு எதிரான மனிதர்களின் செயல் : எதிர்காலத்தில் இன்னும் பல தொற்றுநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
Oct 31 2020 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுற்றுச் சூழலுக்கு எதிரான மனிதர்களின் செயலால் எதிர்காலத்தில் இன்னும் பல தொற்றுநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உடல்நல பாதிப்புகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் பல்வேறு சிக்கல்களை உலகம் சந்தித்தது. இந்நிலையில் வரும் காலத்தில் இன்னும் பல தொற்று நோய்களை உலகம் சந்திக்க உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா அவை, மனிதர்களின் சூழலுக்கு எதிரான செயல்களால் நாளுக்கு நாள் இயற்கை பாதிப்படைந்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் போன்றே 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமிகள் விலங்குகளிடம் உள்ளன. இவைகளால் மனிதர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எச்சரித்துள்ளது.