துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 22 ஆக உயர்வு - 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Oct 31 2020 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிந்தோர் எண்ணிக்‍கை 22 ஆக உயர்ந்துள்ளது.

Aegean கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளில் உணரப்பட்டது. குறிப்பாக துருக்கியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக தென்பட்டது. துருக்கியின் கடற்கரையோர மாகாணமான இஸ்மிரில் 7 புள்ளி பூஜ்ஜியம் என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்‍கை 22 ஆக உயர்ந்துள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலில் ஏற்பட்ட நிலஅதிர்வினால், கடல்நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் பெருக்கெடுத்து ஓடியது. இஸ்மிர் மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல கட்டங்களில் லேசார கீரல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00