பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக தனியாக தவித்து வந்த காவன் என்ற யானை விமானம் மூலம் கம்போடியா வந்தடைந்தது
Nov 30 2020 9:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக தனியாக தவித்து வந்த காவன் என்ற யானை விமானம் மூலம் கம்போடியா வந்தடைந்தது. உலகில் தனியாகப் பராமரிக்கப்பட்ட ஒரே யானையான காவன், பிற யானைகளுடன் சேர்ந்து பழக உதவவேண்டும் என்று பல நாடுகளில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து இஸ்லாமாபாத்திலிருந்து இந்த யானையை கம்போடியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவெடுத்தது. அதனடிப்படையில் ரஷ்ய விமானத்தின் மூலம் 10 மணிநேர பயணத்தின் இறுதியில் காவன், கம்போடியா வந்தடைந்தது.