இலங்கை சிறையில் கைதிகள் - பாதுகாவலர்கள் இடையே பயங்கர மோதல் - 8 பேர் உயிரிழப்பு, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Dec 1 2020 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை சிறைச்சாலையில் கைதிகள் பாதுகாவலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் நிலையில், போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், கொழும்பு நகருக்கு அருகே உள்ள சிறைச்சாலை ஒன்றில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான கைதிகளுக்கு எதிராக பிற கைதிகள் போராட்டம் நடத்தினர். இதனால் கலவரம் மூண்டது.