இந்தோனேசியாவின் எரிமலை வெடித்து ஏராளமான சாம்பல், புகை வெளியேற்றம் : 26 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இடமாற்றம்
Dec 1 2020 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் எரிமலை ஒன்று வெடித்து 4 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு புகை மற்றும் சாம்பல் வெளியேறியதால் ஏராளமான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தோனேசியாவில் 130 எரிமலைகள் எப்போதும் வெடித்துச் சிதறும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. இந்நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நூசா டெங்காரா மாகாண எரிமலை ஒன்று வெடித்து 4 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், புகையும் வெளியேற்றப்பட்டது. இதனால் 26 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.