உகாண்டாவில் அதிபரை எதிர்த்துப் போட்டியிடும் பாப் பாடகரின் பிரச்சாரத்தை சீர்குலைக்க முயல்வதாக புகார்
Dec 1 2020 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உகாண்டாவின் அதிபர் வேட்பாளரும், பாப் பாடகருமான Bobi Wine, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரது ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
உகாண்டா அதிபராக கடந்த 1986ம் ஆண்டிலிருந்து யோவேரி முசவெனி பதவி வகித்துவருகிறார். இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அவரை எதிர்த்து பிரபல பாப் பாடகரான போபி வைன் போட்டியிடுகிறார். ஆனால், அவருக்கு எதிராக போலீசாரையும், ராணுவத்தையும் தற்போதைய அதிபர் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. போபி வைன் பிரச்சாரம் மற்றும் பேரணியின் போது, அமைதியாக பங்கேற்கும் அவரது ரசிகர்கள் மற்றும் தொடண்டர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விரட்டியடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.