அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் மருத்துவமனைகள்
Dec 1 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் தினமும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 25 சதவிகிதம் பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுனர். மற்ற பிரிவுகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் பிற நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலையில் மருத்துவமனைகள் தள்ளாடுகின்றன.