இங்கிலாந்தில் பாலின மாற்றம் செய்த பின் திருமணம் செய்த தம்பதியினர் - இரண்டாவது முறையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு
Dec 1 2020 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் பாலின மாற்றம் செய்துகொண்ட வினோத தம்பதியினர் இரண்டாம் முறையாக குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகி வருகின்றனர். லண்டன் நகரைச் சேர்ந்த ஹன்னா என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்டார். இதே போல் ஜேக் கிராஃப் என்ற பெண், தம்மை ஆணாக பாலின மாற்றம் செய்துகொண்டார். பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஜேக் கிராஃப் பெண்ணாக இருந்த போதே தமது கருமுட்டைகளை சேமித்துவைத்திருந்தார். இதைப் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் ஏற்கெனவே ஒரு குழந்தையைப்பெற்றுக்கொண்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள இந்த வினோத தம்பதியினர் தயாராகிவருகின்றனர்.