கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திணறும் நாடுகள் - பிற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் பின்னடைவு
Dec 1 2020 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலக அளவில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பராமரிப்பதே மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் விளைவாக வழக்கமாக சிகிச்சை தேவைப்படும் எய்ட்ஸ், காச நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பொதுமக்களின் உடல் நிலை பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கெப்ரையேசிஸ் கவலை தெரிவித்துள்ளார்.