இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆளுனருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று - தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிப்பு
Dec 1 2020 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆளுனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. இந்நிலையில், தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுனர் அனீஸ் பஸ்வாடென், தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போதைய நிலையில் தமக்கு அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், நலமுடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.