ஹாங்காங் நகரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க கல்வி நிலையங்கள் மூடல் - ஆர்வத்துடன் திரும்பிய மாணவர்களுக்கு ஏமாற்றம்
Dec 1 2020 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாங்காங் நகரத்தில் பரவும் கொரோனா வைரசைத் தடுக்க கல்வி நிலையங்கள் மீண்டும் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. அதன் ஒரு பகுதியாக தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஒரு நடன விடுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், ஹாங்காங் நகரில் வேகமாக புதிய பாதிப்புக்களை அதிகரித்துவருகிறது. இதனால் கல்வி நிலையங்களை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பின் ஆர்வத்துடன் கல்வி நிலையங்களுக்குத் திரும்பிய மாணவர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.