பனாமா அருகே கடலில் வேகமாகச் சென்ற படகுகளில் சோதனை - 5 டன் எடையுடைய கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
Dec 1 2020 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பனாமா அருகே கடலில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 5 ஆயிரம் கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கரீபிய கடல் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் பனாமா கடற்படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த போது வேகமாகச் சென்ற 3 படகுகளை மறித்துச் சோதனை போட்டனர். அப்போது அவற்றில் சுமார் 6 ஆயிரம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கோக்கைன் என்ற போதைப் பொருளைக் கைப்பற்றினர். மத்திய அமெரிக்கா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த வழியாகத் தான் போதைப் பொருள் கடத்தப்படுவதாக, பனாமா கடற்படையினர் தெரிவித்தனர்.