ஆஸ்திரேலியாவில் கோடை வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள் - நீர்நிலைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Dec 1 2020 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடற்கரை மற்றும் நீச்சல் குளங்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்திவருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக விலக்கப்பட்டுவருவதால், கோடை வெப்பத்தைச் சமாளிக்க பொதுமக்கள் நீர் நிலைகளை நாடி வருகின்றனர். சிட்னி உள்ளிட்ட கடலோர நகரக் கடற்கரைகளில் எப்போது பார்த்தாலும் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காணமுடிகிறது. இதே போல் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.