ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி - பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது
Dec 2 2020 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கிய முதல் நாடு என்ற பெயரை பிரிட்டன் பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 40-க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளன. இந்நிலையில் பிரிட்டனில், ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது. பிரிட்டன் மக்களுக்கு அடுத்த வாரம் முதல் ஃபைசர்-பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஃபைசர்-பயோன்டெக் மருந்து 95 சதவீத செயல்திறன் கொண்டது என இறுதிக்கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, பிரிட்டன் அரசு இந்த மருந்தின் 4 கோடி டோஸ்களை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.