நைஜீரிய தீவிரவாத தாக்குதலுக்கு போப்பாண்டவர் கண்டனம் - போர்னோ மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 110 பேர் பலி
Dec 2 2020 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நைஜீரியாவில் விவசாயிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு போப்பாண்டவர், தமது வாராந்திர உரையின் போது கண்டனம் தெரிவித்துள்ளார். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 110 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.