பாகிஸ்தானில் தனிமையில் பராமரிக்கப்பட்ட யானை - கம்போடியாவில் புதிய வாழ்க்கைக்குத் தயாராகிறது
Dec 2 2020 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானிலிருந்து கம்போடியா கொண்டுவரப்பட்ட காவன் யானை புதிய வாழ்க்கைக்குத் தயாராகி வருகிறது. உலகில் தனிமையில் இருந்த ஒரே யானையான காவன், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகர பூங்காவில் கடந்த 36 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டுவந்தது. பன்னாட்டு விலங்குகள் நல அமைப்புக்களின் வேண்டுகோளை அடுத்து, இந்த யானை கடந்த இரு தினங்களுக்கு முன் கம்போடியாவுக்கு அனுப்பபிவைக்கப்பட்டது. ரஷ்ய சரக்கு விமானம் மூலம் கம்போடியா வந்தடைந்த யானை, புதிய இடத்தில் புதிய வாழ்க்கையைத் தொடர தயாராகிவருகிறது.